Tamilnadu
”நீட்’க்கு எதிரா பேச தைரியம் இல்ல; இதுக்கு போராட வந்துட்டீங்க” - அதிமுகவை சாடிய அமைச்சர் துரைமுருகன்!
நீட் தேர்வுக்கு எதிராக எந்தவித கருத்தும் தெரிவிக்க தைரியம் இல்லாத அதிமுக அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவதாக அறிவிப்பதா என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் உண்மை நிலை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்ய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மதுரை செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நிலவிவரும் இச்சூழ்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகள் மற்றும் அணைக்கட்டுகளில் நிலை குறித்தும் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவித்தார். இன்று முல்லைப் பெரியாறு அணையை நேரில் சென்று ஆய்வு செய்வதாக கூறினார்.
முல்லைப் பெரியாறு அணை பற்றி பலவிதமான செய்திகள் தமிழ்நாட்டை உலாவிக் கொண்டிருப்பதாகவும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முல்லை பெரியாறு அணையை நேரில் சென்று ஆய்வு செய்து அவர்கள் தரப்பு அறிக்கைகளை தெரிவித்திருப்பதாக கூரிய அவர், முல்லை பெரியாறு அணைக்கு நேரில் சென்று எந்தவித ஆய்வும் மேற்கொள்ளாமல் அணையின் நிலவரம் குறித்து தெரியாமல் போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் நீட் தேர்வுக்கு எதிராக எந்தவித கருத்தும் தெரிவிக்க தைரியம் இல்லாத அதிமுக அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவதாக அறிவிப்பதா? என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?