Tamilnadu
”நீட்’க்கு எதிரா பேச தைரியம் இல்ல; இதுக்கு போராட வந்துட்டீங்க” - அதிமுகவை சாடிய அமைச்சர் துரைமுருகன்!
நீட் தேர்வுக்கு எதிராக எந்தவித கருத்தும் தெரிவிக்க தைரியம் இல்லாத அதிமுக அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவதாக அறிவிப்பதா என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் உண்மை நிலை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்ய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மதுரை செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நிலவிவரும் இச்சூழ்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகள் மற்றும் அணைக்கட்டுகளில் நிலை குறித்தும் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவித்தார். இன்று முல்லைப் பெரியாறு அணையை நேரில் சென்று ஆய்வு செய்வதாக கூறினார்.
முல்லைப் பெரியாறு அணை பற்றி பலவிதமான செய்திகள் தமிழ்நாட்டை உலாவிக் கொண்டிருப்பதாகவும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முல்லை பெரியாறு அணையை நேரில் சென்று ஆய்வு செய்து அவர்கள் தரப்பு அறிக்கைகளை தெரிவித்திருப்பதாக கூரிய அவர், முல்லை பெரியாறு அணைக்கு நேரில் சென்று எந்தவித ஆய்வும் மேற்கொள்ளாமல் அணையின் நிலவரம் குறித்து தெரியாமல் போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் நீட் தேர்வுக்கு எதிராக எந்தவித கருத்தும் தெரிவிக்க தைரியம் இல்லாத அதிமுக அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவதாக அறிவிப்பதா? என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!