Tamilnadu
“பட்டாசு வெடிக்க முடியாதா? - தீபாவளி வரை கனமழைக்கு வாய்ப்பு” : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோல் மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில், வரும் நவம்பர் 5ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மிக கனமழை பெய்யக் கூடும். டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 2ம் தேதி வரை இரண்டு நாட்களுக்கும், கன்னியாகுமரி, நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் தீப ஒளித் திருநாளான நவம்பர் 4ம் தேதி அன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !