Tamilnadu
“பட்டாசு வெடிக்க முடியாதா? - தீபாவளி வரை கனமழைக்கு வாய்ப்பு” : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோல் மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில், வரும் நவம்பர் 5ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மிக கனமழை பெய்யக் கூடும். டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 2ம் தேதி வரை இரண்டு நாட்களுக்கும், கன்னியாகுமரி, நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் தீப ஒளித் திருநாளான நவம்பர் 4ம் தேதி அன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!