Tamilnadu
கைக்குழந்தையுடன் பேருந்துகளுக்கு இடையே சிக்கி உயிர்தப்பிய தம்பதி... பதைபதைக்க வைக்கும் CCTV காட்சி!
புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் கைக்குழந்தையுடன் சென்ற தம்பதியினர், இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகேயுள்ள கல்மண்டபம் என்ற கிராமத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பேருந்தை முந்திச் சென்றார்.
அப்போது, எதிர்த்திசையில் மற்றொரு பேருந்து வந்துள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்த அந்த நபர், இரண்டு பேருந்துகளுக்கும் இடையே இருசக்கர வாகனத்தை தடுமாறி நிறுத்தினார்.
அப்போது இருசக்கர வாகனம் பேருந்துகளில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் நூலிழையில் உயிர் தப்பினர்.
பெரும் விபத்திலிருந்து குழந்தை உட்பட மூவர் தப்பிப்பிழைத்தது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. இதுதொடர்பான பதற வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!