Tamilnadu
"வரலாற்றை மாற்றிய முதல்வர்": ஒரே உத்தரவு - பெயர் மாறிய வண்ணான்குளம்!
சென்னை அடுத்த அம்பத்தூர் பகுதியில் உள்ள 'வண்ணான்குளம்' என்ற பகுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி 'வண்ணக்குளம்' என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீளாய்வுக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், வார்டு-82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192ல் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரினை திருத்தம் செய்து வண்ண குளம் என பெயர் மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.
அதனடிப்படையில், அம்பத்தூர் மண்டலம், வார்டு-82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192ல் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரினை திருத்தம் செய்து வண்ண குளம் என்ற புதிய பெயர் வைக்க சிறப்பு அதிகாரி (நிலைக்குழு வரிவிதிப்பு (ம) நிதி) மூலமாக மன்றத்தின் அனுமதி பெறப்பட்டது.
எனவே, முதல்வரின் அறிவுறுத்தலின்படி அம்பத்தூர் மண்டலம், வார்டு-82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192-ல் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரினை திருத்தம் செய்து வண்ண குளம் என பெயர் மாற்றி புதிய பெயர் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !