Tamilnadu
“திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்” : இளைஞருக்கு 20 ஆண்டு சிறை வழங்கி நீதிமன்றம் அதிரடி !
கோவை மாவட்டம் , நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். ஓட்டுநராக இவர் கடந்த 2017ம் ஆண்டு சிறுமி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பிறகு, ஆனந்தகுமார் தம்மை ஏமாற்றுவதை அறிந்த சிறுமி நடந்தவற்றைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி குலசேகரன், சிறுமியை ஆனந்தகுமார் பாலியல் வன்கொடுமை செய்தது ஆதாரங்களுடன் நிறுபனமாகியுள்ளது. ஆகவே அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வித்து உத்தரவிட்டார்.
Also Read
-
”வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்... வடக்கு முதல் மேற்கு வரை முந்தி நிற்கும் திமுக” : முழு விவரம் அறிய!
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை சூப்பர் ஃபாஸ்டாகத் தொடரபோகும் திமுக 2.0 : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
NDA-வை புறக்கணிக்க வேண்டும்! அதுதான் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இன்று முதல் அமலாகும் புதிய விதிகள்… எத்தனை துறைகள்… என்னென்ன மாற்றங்கள்? முழு விவரம் அறிய!
-
பழனிசாமியின் அரசியல் அனுபவம் இதுதான் : தேர்தல் பரப்புரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!