Tamilnadu
உஷார்.. இரவு முழுவதும் சார்ஜ் ஏறியதால் வெடித்து சிதறிய செல்போன் - இளைஞருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா?
கோவை மதுக்கரையைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் சிவராம். இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு தனது அறையில் படுத்துக் கொண்டே செல்போனை பயன்படுத்தியுள்ளார். பிறகு செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளார்.
இதையடுத்து அதிகாலையில் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்போன் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் படுத்துக் கொண்டிருந்த சிவராமன் மீது தீ பிடித்துள்ளது. இதில் உடல் முழுவதும் தீ பரவியது.
பின்னர், வெடிசத்தம் கேட்டு அறைக்கு வந்த பெற்றோர் மகன் தீயில் எறிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே தீயை அணைத்து சிவராமனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவராமன் நேற்று முன்தினம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!