Tamilnadu
உஷார்.. இரவு முழுவதும் சார்ஜ் ஏறியதால் வெடித்து சிதறிய செல்போன் - இளைஞருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா?
கோவை மதுக்கரையைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் சிவராம். இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு தனது அறையில் படுத்துக் கொண்டே செல்போனை பயன்படுத்தியுள்ளார். பிறகு செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளார்.
இதையடுத்து அதிகாலையில் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்போன் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் படுத்துக் கொண்டிருந்த சிவராமன் மீது தீ பிடித்துள்ளது. இதில் உடல் முழுவதும் தீ பரவியது.
பின்னர், வெடிசத்தம் கேட்டு அறைக்கு வந்த பெற்றோர் மகன் தீயில் எறிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே தீயை அணைத்து சிவராமனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவராமன் நேற்று முன்தினம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”கொளத்தூரின் ஒவ்வொரு தெருவிலும் நான் உருவாக்கிய திட்டங்கள்”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
’அழக்கூடாது’... கொளத்தூர் மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!
-
2026 சட்டமன்ற தேர்தல் : 11 ஆவது தோல்வி - 16 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அ.தி.மு.க!
-
“நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்” : தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!
-
“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” : கலைஞர் எழுதிய சுவாரஸ்ய கடிதம் !