Tamilnadu
”என்ன குறை இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க” - காவலர்களுக்கு நம்பிக்கையளித்த டிஜிபி சைலேந்திரபாபு!
சென்னையிலிருந்து சைக்கிளிங் செய்து பூந்தமல்லி, வெள்ளவேடு, மணவாளநகர் வழியாக திருவள்ளூருக்கு சென்று காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார் டிஜிபி சைலேந்திரபாபு.
தமிழக சட்டம் ஒழுங்கு காவல் துறை இயக்குனராக இருக்கும் சைலேந்திரபாபு இன்று காலை சென்னையிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு, பூந்தமல்லி, வெள்ளவேடு, மணவாளநகர் வழியாக திருவள்ளூருக்கு 45 கிலோ மீட்டர் தூரம் பயணித்தார்.
திருவள்ளூரில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகம் வந்த போது அங்கு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்களிடம் தங்களது குறைகளை கேட்டறிந்தார். 25 ஆண்டுகளாக தீயணைப்பு வீரர்களாக பணிப்புரிந்தவர்களை சிறப்பு நிலைய அலுவலராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் தெரிவித்து பெற்றுத் தந்தமைக்கு திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்திற்கு சென்ற போது திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் அதிகாரிகள் அவருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து காவலர்களிடம் பேசிய சைலேந்திரபாபு, தங்களது குறைகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கலாம் என கூறிய அவர் உள்ளே சென்று சிறையை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தார்.
மகளிர் காவல் நிலையத்திலும் குறைகளை கேட்டறிந்த அவர், காவலர் குடியிருப்பில் காவலர்களின் குடும்பத்தாரையும், அவர்களது குழந்தைகளிடமும் கலந்துரையாடி புத்தகங்களை பரிசாக வழங்கினார். மேலும் சிலம்பாட்டம் ஆடிய சிறுவனுக்கும் புத்தகத்தை பரிசாக வழங்கி பாராட்டினார். எந்த குறையாக இருந்தாலும் உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
Also Read
-
“விஜய் ஆட்சியமைக்க தி.மு.க எந்த இடையூறும் செய்யாது” : கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
-
“பிரதமர் மோடிக்கு எப்போதும் அஞ்சாத தலைவர்கள்” : முரசொலி தலையங்கம்!
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?