Tamilnadu
“பெற்ற தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த மகன்” : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். குடிபோதைக்கு அடிமையான சதீஷ், தினமும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சதீஷ் அவரது அம்மா அம்சாவுடன் சண்டையிட்டுள்ளார். அப்போது ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ், பெற்ற தாய் என்றும் பாராமல் கன்னத்தில் அறைந்துள்ளார்.
அப்போது மயங்கி கீழே விழுந்த அம்சா பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். ஆனால் அடித்தபிறகு எதையுமே கண்டுகொள்ளாமல் வீட்டை விட்டு சதீஷ் வெளியேறியுள்ளார். சண்டை நடைபெற்றதை அறிந்து வீட்டுக்குள் வந்த அக்கம் பக்கத்தினர் மயங்கிய நிலையில் இருந்த அம்சாவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி அம்சா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அம்சாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடுங்கையூர் போலிஸார் வழக்குப் பதிவு செய்துசதீஷை கைது விசாரணை நடத்தியதில் அம்சாவை கன்னத்தில் அறைந்தது மட்டுமின்றி, கழுத்தையும் நெரித்துள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து தாயை கொலை செய்த வழக்கில் போலிஸார் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!