Tamilnadu
“3 ஆண்டுகளில் சென்னை பெருங்குடி குப்பை கிடங்கு அகழ்ந்தெடுக்கும் பணி நிறைவடையும்”: அமைச்சர் KN.நேரு தகவல்!
சென்னை பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்கும் பணியை நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். 225 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொண்ட பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் உள்ள 34.02 லட்சம் கன மீட்டர் குப்பைகளை ரூபாய் 350 கோடி செலவில் அகழ்ந்தெடுக்கும் பணி 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “பயோ மைனிங் முறையில் குப்பைகள் பிரித்தெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தார். இப்பகுதியில் கடந்த 10 வருடங்களாக எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் பணிகளை 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொடுங்கையூரிலும் இதேபோன்று பணிகள் நடைபெறவுள்ளன. இனி வரும் காலங்களில் குப்பைகளை கொட்டும்போதே மக்கும் குப்பைகள் மக்கா குப்பைகள் என பிரித்தெடுக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற பகுதிகளில் மொத்தம் 2 கோடி டன் குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதில் 44 இடத்தில் குப்பைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு 164 ஏக்கர் நிலம் சரி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 55 லட்சம் டன் குப்பைகள் அகழ்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் பணிகளை விட குப்பைகளால் வரும் சுகாதார சீர்கேடுகளை தடுப்பதே முக்கியமாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் உள்ள குப்பைகள் அகழ்ந்தெடுக்கும் பணி சென்னை மக்களுக்கு விடியல். இந்த இடத்தை பசுமை நிலமாக மாற்றும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார்.
இந்தத் திட்டம் சோழிங்கநல்லூர் மக்களுக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் சென்னை மக்களுக்கும் கனவுத் திட்டம். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பெருங்குடி குப்பை கிடங்கு அகற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். தி.மு.க அளித்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!