Tamilnadu
வீட்டுக்குள் சென்ற தாய் வருவதற்குள் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்... விழுப்புரம் அருகே சோகம்!
விழுப்புரம் மாவட்டம், பெரிய முதலியார் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சத்திகுமார். இவரது மனைவி மனோன்மணி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், 2 வயதில் வித்தியஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் மனோன்மணி வீட்டின் வெளியே குழந்தை வித்தியஸ்ரீயை தூக்கிவத்து உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது குழந்தைக்குத் தாகம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை இறக்கிவிட்டு தண்ணீர் எடுத்துவர மனோன்மணி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர், அவர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை வித்தியஸ்ரீ காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கம் தேடி பார்த்துள்ளார். பிறகு வீட்டின் அருகே உள்ள நீச்சல் குளத்திற்குச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது குழந்தை வித்தியஸ்ரீ நீச்சல் குளத்தில் மிதந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டு அழுதுள்ளார். இவரின் குரல் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் நீச்சல் குளத்திலிருந்து வெளியே எடுத்துப் பார்த்தபோது குழந்தை இறந்திருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் குளத்தில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இந்தியாவில் 67% பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் : வெளியான அதிர்ச்சி அறிக்கை!
-
நாடாளுமன்றத்தின் அலுவல் தொடர்பிற்கு ஏன் இந்தி மொழி ஆதிக்கம்? : துரை வைகோ எம்.பி கண்டனம்!
-
ஜவுளி ஏற்றுமதி : குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
“தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால்; தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள்!” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!