Tamilnadu
வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்த போலி போலிஸ்: நிஜ போலிஸிடம் சிக்கியது எப்படி?
மதுரை மாவட்டம், ஆஸ்டின்பட்டி சாலையில் வாகன ஓட்டிகளிடம் போலிஸ் என கூறி ஒருவர் பணம் வசூல் செய்து வருவதாகப் பெருங்குடி காவல்நிலையத்திற்குப் புகார் வந்துள்ளது.
இதையடுத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலிஸார் அப்பகுதிக்குச் சென்றனர். அப்போது போலிஸ் உடை அணிந்த ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இந்த நபர்,அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்துக் கொண்டிருந்தார்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். பின்னர் அவரை போலிஸார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கரந்தைமலை என்பது தெரியவந்தது. மேலும் இவர் மதுபானம் மற்றும் கஞ்சா விற்று வந்ததும் தெரிந்ததை அடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் பதுக்கிவைத்திருந்த மதுபாட்டில்கள், கஞ்சா பொட்டலங்களை போலிஸார் பறிமுதல் செய்தனர்.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!