Tamilnadu
“4 மாத குழந்தைக்கு எலி மருந்து கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்” - சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!
தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மகேந்திரன் - அனிதா தம்பதியர். திருமணம் நடந்து 5 வருடங்களான இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு குழந்தைக்கு 4 மாதங்கள் ஆனதாகக் கூறப்படுகிறது.
இதில் இரண்டாவதாக பிறந்த குழுந்தைக்கு கால்கள் சற்று குறைபாடாக இருந்ததாலும், கணவரின் வருமானத்தில் குடும்பத்தை சரியாக நடத்தமுடியவில்லையே என்ற மன உளைச்சலிலும் இருந்து வந்துள்ளார் அனிதா.
இதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த அனிதா, தனது இரண்டாவது குழந்தைக்கு பாலில் எலி பேஸ்டை கலந்து கொடுத்துவிட்டு, தானும் குடித்திருக்கிறார். சிறிது நேரத்தில் வலி தாங்க முடியாமல், தாயும், குழந்தையும் கதறி அழுதுள்ளனர்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அளித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் அனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஹரியானாவில் கவிழும் பா.ஜ.க அரசு : அங்கு நடப்பது என்ன?
-
நயினார் உறவினரிடமிருந்து ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு : அடுத்தடுத்து சிக்கும் பாஜக நிர்வாகிகள் !
-
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி! : தமிழ்நாடு அரசு நடவடிக்கை!
-
“மோடியை குறித்து அறிய இதை படியுங்கள்” - BATMINTON வீராங்கனை சாய்னாவுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்!
-
”மின்னணு ஏற்றுமதியில் கொடி கட்டிப் பறக்கும் தமிழ்நாடு” : தினத் தந்தி நாளேடு பாராட்டு!