Tamilnadu
ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரைப் பயன்படுத்தி ரூ 44 லட்சம் மோசடி... குற்றவாளியைக் கைது செய்த போலிஸ்!
சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் மதனகோபால். இவரைக் கமலக்கண்ணன் என்பவர் சந்தித்து தனது மகள்களுக்கு அரசு வேலை வாங்கித்தர உதவ முடியுமா என கேட்டுள்ளார்.
அப்போது, கமலக்கண்ணன், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உறவினர் என்றும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கமலக்கண்ணனிடம் ரூ.44 லட்சம் வாங்கியுள்ளார்.
ஆனால், சொன்னபடி மதனகோபால் அரசு வேலை வாங்கித் தரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை கமலக்கண்ணன் திருப்பி கேட்டுள்ளார். இதற்குப் பணம் தரமுடியாது என மதனகோபால் தெரிவித்துள்ளார்.
பின்னர் இது குறித்து கமலக்கண்ணன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் மதனகோபாலை கைது செய்து அவரிடமிருந்த கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!