Tamilnadu
“மக்களுக்காக தினமும் 19 மணிநேரம் உழைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : குலாம் நபி ஆசாத் புகழராம் !
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஒன்றிய முன்னாள் அமைச்சருமான குலாம் நபி ஆசாத் இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குலாம் நமி ஆசாத், “இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சரா மு.க.ஸ்டாலின் உள்ளார். அவரது செயல்பாடுகள் மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. தினந்தோறும் 18 முதல் 19 தணி நேரம் அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்து வருகிறார்.
தந்தை கலைஞரை போலவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மக்களுக்காக உழைத்து வருகிறார். மேலும் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிச் சிறந்த முதலமைச்சராகச் செயல்படுகிறார்” என தெரிவித்தார்.
முதலமைச்சருடனான இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?