Tamilnadu
PSBB-ல் சீட்; ரூ.5 லட்சத்தை வாங்கி மோசடி; மதுவந்தி மீது போலிஸில் புகார்!
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய மகனுக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ப்பதற்காக இடம் கேட்டு, அந்தப் பள்ளியில் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தியை அணுகியிருக்கிறார்.
அதற்காக 5 லட்ச ரூபாய் பணத்தை மதுவந்தியிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் தன்னுடைய மகனுக்கு பள்ளியில் இடம் கொடுப்பதாக கூறி அலை கழித்ததாகவும் இறுதியில் பணத்தை கொடுக்காமலும், பணத்தை கேட்டதற்கு, உன்னால் முடிந்ததைச் செய்துகொள் என மதுவதந்தி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகோபால் இது தொடர்பாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக கே.கே.நகர் போலிஸார் அவரது புகார் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
வியட்நாமில் கவிழ்ந்த சுற்றுலாப் படகு.. 10 தமிழர்கள் பலி.. மகிழ்ச்சியான இடத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம்!
-
நெல்லையில் நடந்த கொடூரம்.. சுற்றி வளைத்த கும்பல்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த உடல்.. அச்சத்தில் மக்கள்!
-
“இனிமையும் இளமையும் மாறாத குரல்.. கானகோகிலம் எஸ்.ஜானகி மறைவு பேரிழப்பு” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘இசை உலகின் மகுடம் எஸ்.ஜானகி காலமானார்.. 17 மொழிகள்.. 40,000+ பாடல்கள்.. காலத்தால் அழியாத குரல்’
-
‘பவர் சென்டர்’ ஆக முயற்சிக்கும் ஆளுநரின் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும் : கி.வீரமணி எச்சரிக்கை!