Tamilnadu
PSBB-ல் சீட்; ரூ.5 லட்சத்தை வாங்கி மோசடி; மதுவந்தி மீது போலிஸில் புகார்!
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய மகனுக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ப்பதற்காக இடம் கேட்டு, அந்தப் பள்ளியில் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தியை அணுகியிருக்கிறார்.
அதற்காக 5 லட்ச ரூபாய் பணத்தை மதுவந்தியிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் தன்னுடைய மகனுக்கு பள்ளியில் இடம் கொடுப்பதாக கூறி அலை கழித்ததாகவும் இறுதியில் பணத்தை கொடுக்காமலும், பணத்தை கேட்டதற்கு, உன்னால் முடிந்ததைச் செய்துகொள் என மதுவதந்தி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகோபால் இது தொடர்பாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக கே.கே.நகர் போலிஸார் அவரது புகார் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!