Tamilnadu
ஆடுகளைக் காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் மழைநீரில் மூழ்கி பலி.. கரூர் அருகே சோகம்!
கரூர் அருகே ஆடுகளை மீட்க முயன்றபோது தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் புனவாசிப்பட்டி சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரது மகன் நவீன்குமார் (13). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன்கள் வசந்த் (13), கவின் என்கிற மயில்முருகன் (12). சிறுவர்கள் 3 பேரும் அப்பகுதியில் இன்று ஆடு மேய்த்துள்ளனர்.
அப்போது, அங்குள்ள தனியார் நிலத்தில் மண் எடுக்கப்பட்ட இடத்தில் தேங்கியிருந்த மழைநீர் குட்டையில் இறங்கிய ஆடுகளை மீட்பதற்காக குட்டையில் இறங்கிய 3 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் 3 பேரின் சடலங்களையும் மீட்டனர். இதுகுறித்து, லாலாபேட்டை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடுகளை மீட்க முயன்றபோது மழைநீரில் மூழ்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!