Tamilnadu
கணவனை ஏமாற்றி பெற்ற குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்ற கொடூரத் தாய்: பகீர் சம்பவத்தின் பின்னணி!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்குத் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயமலர் என்பவருடன் 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயமலர் தனது கணவரைப் பிரிந்து குழந்தையுடன் தூத்துக்குடிக்கு வந்துவிட்டார்.
பின்னர் மனைவி மற்றும் குழந்தையைப் பார்ப்பதற்காக மணிகண்டன் தூத்துக்குடி சென்றுள்ளார். அப்போது வீட்டில் குழந்தை இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து மனைவி ஜெயமலரிடம் கேட்டுள்ளார்.
இதற்கு அவர் சரியான பதில் சொல்லாமல் மழுப்பலாகப் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்து குழந்தை குறித்து அக்கம்பக்கத்தில் விசாரணை செய்துள்ளார். இதில் குழந்தையை விருதுநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ், அந்தோணி, கிருபா, செல்வராஜ், டேனியல் ஆகியோர் உதவியுடன் ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்ததை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், இது குறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தாய் ஜெயமலர் உட்பட ஆறு பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஐந்து பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே தனது குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!