Tamilnadu
வேலுமணி, விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் வீட்டில் சோதனை: கைது நடவடிக்கைக்குத் தயாராகும் லஞ்ச ஒழிப்புத்துறை?
அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார்கள் எழுந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து வேலுமணி மற்றும் விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்தவர்களிடமும் அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். அதன்படி ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையின் உதவியாளர் முருகானந்தம் அவரது மனைவி பஞ்சாயத்துத் தலைவர் காந்திமதிக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
முருகானந்தம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உதவியாளராகவும் அவரது மனைவி 'காந்திமதி முள்ளம் குறிச்சி பஞ்சாயத்துத் தலைவராகவும் உள்ளனர். இவர் முன்னால் அமைச்சர் வேலுமணி மற்றும் விஜயபாஸ்கருக்கும் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் மேலும் தமிழ்நாடு முழுவதும் மின் விளக்குகள் பொருத்தும் பணியில் காண்ராக்ட் எடுத்து வேலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் கைது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“நான்காம் ஆண்டில் திராவிட மாடல் அரசு - சாதனை முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!