Tamilnadu
வேலுமணி, விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் வீட்டில் சோதனை: கைது நடவடிக்கைக்குத் தயாராகும் லஞ்ச ஒழிப்புத்துறை?
அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார்கள் எழுந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து வேலுமணி மற்றும் விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்தவர்களிடமும் அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். அதன்படி ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையின் உதவியாளர் முருகானந்தம் அவரது மனைவி பஞ்சாயத்துத் தலைவர் காந்திமதிக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
முருகானந்தம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உதவியாளராகவும் அவரது மனைவி 'காந்திமதி முள்ளம் குறிச்சி பஞ்சாயத்துத் தலைவராகவும் உள்ளனர். இவர் முன்னால் அமைச்சர் வேலுமணி மற்றும் விஜயபாஸ்கருக்கும் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் மேலும் தமிழ்நாடு முழுவதும் மின் விளக்குகள் பொருத்தும் பணியில் காண்ராக்ட் எடுத்து வேலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் கைது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!