Tamilnadu
“எந்நேரமும் இதையே விளையாடக்கூடாது” : கண்டித்த பெற்றோர்... மனமுடைந்து விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவன்!
நெல்லை மாவட்டம் மன்னார்புரத்தை அடுத்த இந்திரா நகர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வள்ளிமயில். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சஞ்சய் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், சஞ்சய் தடை செய்யப்பட்ட ஃப்ரீபயர் ஆன்லைன் கேமை தனது செல்போனில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இதை பெற்றோர்கள் கண்டித்தும் சஞ்சய் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.
இதையடுத்து சஞ்சய் வீட்டில் ஃப்ரீபயர் விளையாடியதைப் பார்த்த பெற்றோர் அவரை கடுமையாகத் திட்டி கண்டித்துள்ளனர். இதனால் மாணவன் சஞ்சய் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன்: அதிரடியான தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : 51 முக்கிய அம்சங்கள்!
-
TN Election 2026 : திமுக கூட்டணியில் CPI-க்கு 5 தொகுதிகள்... வேட்பாளர்கள் யார்? - விவரம் உள்ளே!
-
5 மாவட்டங்கள், 32 தொகுதிகள்.. வெளியானது முதலமைச்சரின் முதல்கட்ட பிரச்சார அட்டவணை: - முழு விவரம் உள்ளே!
-
#TNElection2026Breaking : ம.தி.மு.க, IUML, MMK கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!