Tamilnadu
"இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க" : 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை - சேலத்தில் அதிர்ச்சி!
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முருகேஸ்வரி. இந்த தம்பதிக்குச் சீனிவாசன், கிருஷ்ணப்பிரியா என இரண்டு குழந்தைகள் இருந்தனர். முருகன், சேலம் மாவட்டம் குப்பனூர் பகுதியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் முருகன் தனது இரண்டு குழந்தைகளையும் குப்பனூர் பகுதியில் உள்ள மாந்தோப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு திடீரென குழந்தைகளைத் தாக்கி, மரத்தில் தூக்கிட்டு கொலை செய்துள்ளார்.
பின்னர் இதை வீடியோ எடுத்து, "இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க" எனப் பேசியுள்ளார். மேலும் இந்த வீடியோவை தனது உறவினர்களுக்கு அனுப்பிவைத்துவிட்டு முருகனும் அதே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று பேரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலிஸார் முருகனின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில விருதுகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!