Tamilnadu
"இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க" : 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை - சேலத்தில் அதிர்ச்சி!
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முருகேஸ்வரி. இந்த தம்பதிக்குச் சீனிவாசன், கிருஷ்ணப்பிரியா என இரண்டு குழந்தைகள் இருந்தனர். முருகன், சேலம் மாவட்டம் குப்பனூர் பகுதியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் முருகன் தனது இரண்டு குழந்தைகளையும் குப்பனூர் பகுதியில் உள்ள மாந்தோப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு திடீரென குழந்தைகளைத் தாக்கி, மரத்தில் தூக்கிட்டு கொலை செய்துள்ளார்.
பின்னர் இதை வீடியோ எடுத்து, "இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க" எனப் பேசியுள்ளார். மேலும் இந்த வீடியோவை தனது உறவினர்களுக்கு அனுப்பிவைத்துவிட்டு முருகனும் அதே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று பேரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலிஸார் முருகனின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!