Tamilnadu
“யானையை காப்பாற்றச் சென்ற புகைப்படக்காரர் நீரில் மூழ்கி பலி”: ஒடிசாவில் மீட்பு பணியின் போது நடந்த சோகம்!
ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மகாநதி ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் முண்டாலி என்ற பகுதியில் ஆற்றைக் கடக்க முயன்ற யானை ஒன்று மகாநதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழு யானையை மீட்டும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் செய்தி புகைப்படக்காரர் அரிந்தம் என்பவரும் மீட்பு பணியில் ஈடுபட்டார். அப்போது யானை ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டதால், மீட்புக்குழு படகில் சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து படகு தண்ணீல் கவிழந்து விபத்துக்குள்ளானது.
இதில் செய்தி புகைப்படக்காரர் அரிந்தம் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அதிரடி மீட்புக் குழுவில் உள்ள வீரர் ஒருவர் ஆபத்தான நிலையில் ஐ.சி.யூ. வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 3 வீரர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். புகைப்படக்காரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அசாம் மாநிலத்தில் போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுருண்டு விழுந்தவரை புகைப்படக்காரர் ஒருவர் ஏரி மித்தித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் யானையைக் காப்பற்ற ஒடிசாவில் பத்திரிக்கையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று எதிரிகள் புலம்புகிறார்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“தமிழ்ப் பெண்களை, வெல்லும் பெண்களாக மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம்!
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!