Tamilnadu
உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளிலும் அநீதி; அதிமுக அரசால் 4 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட தமிழக மாணவர்கள்!
ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த 'நீட்' நுழைவுத் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு சிதைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில், மாநில மருத்துவ மாணவர்களின் சேர்க்கையும் 2017ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகக் குறைந்து வந்துள்ளது என நீட் தேர்வு தாக்கம் குறித்து ஏ.கே. ராஜன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதே நேரம் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் பிற மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது என்பதையும் இந்த குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீட் வருவதற்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் சேர்க்கை 2013ம் ஆண்டிலிருந்து 2016 வரை 100% என்று இருந்துள்ளது. ஆனால், நீட் நுழைவுத் தேர்வு வந்த பிறகு மருத்து மாணவர்களின் உயர்கல்வி படிப்பிற்கான சேர்க்கை கணிசமாகக் குறைந்து வந்துள்ளது. 100% இருந்த இந்த எண்ணிக்கை நான்கே ஆண்டுகளில் 34% சரிந்துள்ளது.
அதேவேளையில், தமிழ்நாட்டில் பிற மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 2017ம் ஆண்டு 24% இருந்தது. தற்போது 2020 -2021 ம் ஆண்டில் 66% ஆக அதிகரித்துள்ளது.
அதிமுக ஆட்சியின் கடந்த 10 ஆண்டுகளில் உயர் கல்வி மருத்துவ படிப்புகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பது ஏ.கே. ராஜன் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மூலம் தெரியவந்துள்ளது.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வு குறித்து தனது பரிந்துரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!
-
“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!
-
த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!
-
“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!