Tamilnadu
நாக்கால் நக்கி, காலால் மிதித்த வடமாநில தொழிலாளி: ரஸ்க் ஆலை மீது அதிரடி ஆக்ஷன் எடுத்த அதிகாரிகள்!
தமிழ்நாட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உணவு பண்டங்களில் அட்டூழியங்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.
சென்னை அம்பத்தூரில் கெட்டுப்போன உருளைக்கிழங்கில் புழு இருந்ததை அடுத்து பானிபூரி விற்று வந்த வட மாநில இளைஞரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோன்று, காரைக்குடியில் ரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்க்குகளை பேக் செய்த போது வட மாநில தொழிலாளர் ஒருவர் அதனை தனது நாக்கால் நக்கி, தட்டில் வைக்கப்பட்டிருந்த ரஸ்க்குகளை காலால் தேய்த்தது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி மக்களிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தியது.
மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரஸ்க்குகள் மீது இதுபோன்ற இழி செயல்களில் ஈடுபட்ட நபர் மீதும் தொடர்புடைய தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.
இந்நிலையில், காரைக்குடியில் உள்ள சுமார் பத்து ரஸ்க் பேக்டரிகள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தயாரிக்கப்பட்ட ரஸ்குகளை தரையில் கொட்டி அதனை பாக்கெட்டுகளில் நிரப்புவதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதனையடுத்து தரமற்ற, சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட சுமார் 200 கிலோ ரஸ்குகளை குப்பையில் கொட்டிய அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்து, விசாரணைக்கும் முடுக்கிவிட்டுள்ளனர்.
Also Read
-
“தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா” : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!