Tamilnadu
மது விருந்து;ஆபாச நடன நிகழ்ச்சி: கர்நாடக எல்லையில் குத்தாட்டம் போட்ட 2 பெண்கள் உட்பட 35 பேர் அதிரடி கைது!
கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் தனியார் ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நேற்று இரவு மது விருந்து, ஆபாச நடன நிகழ்ச்சி நடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து ஆனெக்கல் போலிஸார் தனியார் விடுதிக்குச் சென்று மது போதையில் நடனமாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அனைவரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வந்துள்ளனர் என்பதும், ரேவ் பார்ட்டி என்ற பெயரில் இந்த நள்ளிரவு ஆபாச நடன விருந்துகள் நடைபெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த மது விருந்தில் கலந்து கொண்ட 2 பெண்கள் உட்பட 35 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக எல்லையில் தனியார் விடுதியில் மது விருந்து கொண்டாட்டம் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
'அ.முத்துலிங்கம் இயல் விருது' - ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கான அங்கீகாரம் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
“நீட் தேர்வு ரத்து என்பதே ஒரே தீர்வு” : மக்களவையில் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் பேச்சு!
-
சமஸ்கிருதத்திற்கு 6,100 - தமிழுக்கு 12 : ஆசிரியர்கள் நியமனத்தில் அநீதி - ஒன்றிய அரசின் அதிர்ச்சி தகவல்!
-
“தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3ம் இடம்.. ஆளுநரை எதிர்க்க தவெக அரசு அஞ்சுவது ஏன்?”
-
“மேகதாது விவகாரம்.. படவசூல் பாதிக்கும் என.. தமிழ்நாட்டின் உரிமை அடகுவைப்பு” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!