Tamilnadu
நகை திருட்டு வழக்கில் தந்தை கைது.. சோகத்தில் மகன் தற்கொலை - மகன் தற்கொலையால் விபரீத முடிவு எடுத்த தந்தை!
திருவண்ணாமலை மாவட்டம் அருணகிரி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி உஷாராணி. இவருடைய மகன் கோகுல் என்பவர் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், விஜயகுமார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு செய்யாற்று வென்றான் என்ற கிராமத்தில் முருகன் என்பவரது வீட்டில் இரண்டு சவரன் நகை திருடியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க விஜயகுமாரை போலிஸார் அழைத்துச் சென்றனர்.
பின்னர், திருட்டு வழக்கில் தந்தையை அழைத்துச் சென்றதால் மனைவி உஷாராணி, மகன் கோகுல் ஆகியோர் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொதுமக்களால் மீட்கப்பட்ட உஷாரானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து மகன் தற்கொலை செய்து கொண்டு இறந்ததை அடுத்து இறுதி நிகழ்ச்சிக்காக விஜயகுமாரை போலிஸார் அனுமதித்தனர். பின்னர் இறுதி நிகழ்ச்சி முடிந்து வீட்டிலிருந்தபோது யாரும் இல்லாத நேரத்தில் விஜயகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிறகு விஜயகுமாரின் உடலை மீட்ட போலிஸார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு சவரன் நகைக்கு ஆசைப்பட்டு தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு... : சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இடம்பெற்ற 10 முக்கிய அம்சங்கள்!
-
“11.9% பொருளாதார வளர்ச்சி” : பேரவையில் அ.தி.மு.க.வுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தரணி முழுமைக்கும் முரசொலிம் இடைக்கால பட்ஜெட்” : கி.வீரமணி வரவேற்பு!
-
இனி டிமாண்டி சாலை, “எம்.எஸ். விஸ்வநாதன் சாலை” என்று அழைக்கப்படும்! - புதிய பெயர் பலகை திறப்பு!
-
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள் வெளியீடு! : முழு விவரம் உள்ளே!