Tamilnadu
மது போதையில் தகராறு... ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த சகோதரர்கள்: தூத்துக்குடியில் பயங்கரம்!
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சிவபெருமாள். ஆட்டோ ஓட்டுநரான இவரும். உறவினர் ஆறுமுகம் என்பவரும் நேற்று முன்தினம் திம்மையார் காலனி பகுதியில் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் சிவபெருமாளின் ஆட்டோவை அடித்து சேதப்படுத்தியுள்ளார் ஆறுமுகம். இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
அந்நேரத்தில் அங்கிருந்து ஆறுமுகத்தின் தம்பி சொர்ணராஜி சிவபெருமாளைத் தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்த சிவபெருமாளைக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதைப்பார்த்த பொதுமக்கள் இருவர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு சிவபெருமாளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த சிவபெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து தூத்துக்குடி தன்பாகம் போலிஸார் ஆறுமுகம் மற்றும் சொர்ணராஜி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மது போதையில் ஆட்டோ ஓட்டுநர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!