Tamilnadu
மது போதையில் தகராறு... ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த சகோதரர்கள்: தூத்துக்குடியில் பயங்கரம்!
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சிவபெருமாள். ஆட்டோ ஓட்டுநரான இவரும். உறவினர் ஆறுமுகம் என்பவரும் நேற்று முன்தினம் திம்மையார் காலனி பகுதியில் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் சிவபெருமாளின் ஆட்டோவை அடித்து சேதப்படுத்தியுள்ளார் ஆறுமுகம். இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
அந்நேரத்தில் அங்கிருந்து ஆறுமுகத்தின் தம்பி சொர்ணராஜி சிவபெருமாளைத் தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்த சிவபெருமாளைக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதைப்பார்த்த பொதுமக்கள் இருவர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு சிவபெருமாளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த சிவபெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து தூத்துக்குடி தன்பாகம் போலிஸார் ஆறுமுகம் மற்றும் சொர்ணராஜி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மது போதையில் ஆட்டோ ஓட்டுநர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
TN Election 2026 : திமுக கூட்டணியில் CPI-க்கு 5 தொகுதிகள்... வேட்பாளர்கள் யார்? - விவரம் உள்ளே!
-
5 மாவட்டங்கள், 32 தொகுதிகள்.. வெளியானது முதலமைச்சரின் முதல்கட்ட பிரச்சார அட்டவணை: - முழு விவரம் உள்ளே!
-
#TNElection2026Breaking : ம.தி.மு.க, IUML, MMK கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
-
தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : யார் யார் எந்த தொகுதியில் போட்டி?
-
தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : DravidianModel 2.0 Starts Now - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!