Tamilnadu
“திருச்சியில் மருத்துவ மாணவர் தற்கொலை” : வெளிவந்த அதிர்ச்சி காரணம்!
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி இளநிலை மருத்துவம் பயின்று வந்தார் ரஞ்சித்குமார். இந்நிலையில் நேற்று இரவு ரஞ்சித்குமாரின் அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த விடுதி மாணவர்கள் அவரது அறையின் பின்பக்க ஜன்னலைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது, ரஞ்சித்குமார் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மாணவர் தற்கொலை குறித்து போலிஸார் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில், கடந்த தேர்வில் இரண்டு பாடங்களில் ரஞ்சித்குமார் தோல்வியடைந்துள்ளார். மேலும் இவருடன் படித்த மற்ற மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக பணிக்குச் செல்ல உள்ளனர். இதனால் இவர் மன உளைச்சலில் இருந்தார் எனத் தெரிவித்துள்ளனர்.
ரஞ்சித்குமார் தேர்வில் தோல்வியடைந்ததால்தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது இருக்கிறதா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி? - “தூய்மையான அரசியலுக்கு உகந்துதானா?” - விசிக MP ரவிக்குமார் கேள்வி!
-
மீண்டும் மீண்டும் மக்களை அவதிக்குள்ளாக்கும் த.வெ.க : வரவேற்பு கொண்டாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்!
-
“இன்று மகளிரின் நம்பிக்கையாக திகழும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” : முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
ரூ.1000 வரவு வைத்தது தவெக அரசு : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே நிலைத்து நிற்கும்!
-
“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல”: மீண்டும் பிற்போக்குவாதிகளை கதறவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி