Tamilnadu
“திருச்சியில் மருத்துவ மாணவர் தற்கொலை” : வெளிவந்த அதிர்ச்சி காரணம்!
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி இளநிலை மருத்துவம் பயின்று வந்தார் ரஞ்சித்குமார். இந்நிலையில் நேற்று இரவு ரஞ்சித்குமாரின் அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த விடுதி மாணவர்கள் அவரது அறையின் பின்பக்க ஜன்னலைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது, ரஞ்சித்குமார் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மாணவர் தற்கொலை குறித்து போலிஸார் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில், கடந்த தேர்வில் இரண்டு பாடங்களில் ரஞ்சித்குமார் தோல்வியடைந்துள்ளார். மேலும் இவருடன் படித்த மற்ற மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக பணிக்குச் செல்ல உள்ளனர். இதனால் இவர் மன உளைச்சலில் இருந்தார் எனத் தெரிவித்துள்ளனர்.
ரஞ்சித்குமார் தேர்வில் தோல்வியடைந்ததால்தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது இருக்கிறதா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !