Tamilnadu
"1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?" : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுவது என்ன?
தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 30ஆம் தேதி முதலமைச்சர் முடிவு செய்வார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவெறும்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் நேற்று பள்ளிகள் திறப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சரிடம் அறிக்கையாக அளிக்க உள்ளோம்.
மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்.30ம் தேதிவரை அமலில் உள்ளது. முதலமைச்சர் நடத்தவுள்ள கலந்தாலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அளிக்கும் அறிக்கையும் ஆய்வு செய்யப்படும். பின்னர் வகுப்புகளைத் திறப்பதாக வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்து அறிவிப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!