Tamilnadu
"1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?" : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுவது என்ன?
தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 30ஆம் தேதி முதலமைச்சர் முடிவு செய்வார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவெறும்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் நேற்று பள்ளிகள் திறப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சரிடம் அறிக்கையாக அளிக்க உள்ளோம்.
மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்.30ம் தேதிவரை அமலில் உள்ளது. முதலமைச்சர் நடத்தவுள்ள கலந்தாலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அளிக்கும் அறிக்கையும் ஆய்வு செய்யப்படும். பின்னர் வகுப்புகளைத் திறப்பதாக வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்து அறிவிப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!