Tamilnadu
"1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?" : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுவது என்ன?
தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 30ஆம் தேதி முதலமைச்சர் முடிவு செய்வார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவெறும்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் நேற்று பள்ளிகள் திறப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சரிடம் அறிக்கையாக அளிக்க உள்ளோம்.
மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்.30ம் தேதிவரை அமலில் உள்ளது. முதலமைச்சர் நடத்தவுள்ள கலந்தாலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அளிக்கும் அறிக்கையும் ஆய்வு செய்யப்படும். பின்னர் வகுப்புகளைத் திறப்பதாக வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்து அறிவிப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல் வேலைவாய்ப்பு வரை... முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் நிகழ்ந்தது என்ன?
-
ரூ.62.5 கோடியில் UPSC தேர்வுப் பயிற்சி மையக் கட்டடம், செயலி... அறிமுகப்படுத்துகிறார் முதலமைச்சர்!