Tamilnadu
தாத்தா, பாட்டியை வீட்டோடு எரித்து கொலை செய்த பேரன்: சேலத்தில் கொடூர சம்பவம்!
சேலம் மாவட்டம், கொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா. இவரது மனைவி காசியம்மாள். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களது மூன்றாவது மகன் குமாரின் மகன் ரிஷிவந்தை, உறவினருடன் ஒப்பிட்டுப் பேசி கண்டித்து வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் ரிஷிவந்த் நேற்று நள்ளிரவில் தாத்தா, பாட்டி தூக்கிக் கொண்டிருந்தபோது குடிசை வீட்டிற்குத் தீவைத்துள்ளார். இதில் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் தீயில் கருகிய வயதான தம்பதியினரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சிறுவன் ரிஷிவந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாத்தா, பாட்டியைத் தீவைத்து எரித்து பேரன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!