Tamilnadu
தாத்தா, பாட்டியை வீட்டோடு எரித்து கொலை செய்த பேரன்: சேலத்தில் கொடூர சம்பவம்!
சேலம் மாவட்டம், கொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா. இவரது மனைவி காசியம்மாள். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களது மூன்றாவது மகன் குமாரின் மகன் ரிஷிவந்தை, உறவினருடன் ஒப்பிட்டுப் பேசி கண்டித்து வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் ரிஷிவந்த் நேற்று நள்ளிரவில் தாத்தா, பாட்டி தூக்கிக் கொண்டிருந்தபோது குடிசை வீட்டிற்குத் தீவைத்துள்ளார். இதில் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் தீயில் கருகிய வயதான தம்பதியினரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சிறுவன் ரிஷிவந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாத்தா, பாட்டியைத் தீவைத்து எரித்து பேரன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!