Tamilnadu
நீட் காரணமாக உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. பெற்றோருக்கு ஆறுதல்!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் - சிவஜோதி தம்பதியரின் இரண்டாவது மகன் தனுஷ் என்ற மாணவர் கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த நிலையில், இன்று நடைபெறும் நீட் தேர்விற்கு தயாராகி வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு 11 மணி வரை படித்து வந்த மாணவர் மாணவர் தனுஷ் , நீட் தேர்விற்கு பயந்த இன்று அதிகாலை வீட்டின் உள்ள தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிவுற்று அவரது சொந்த கிராமமான கூழையூர் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டு, பொது மக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர்கள், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாணவர் தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
Also Read
-
“காங்., திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது.. எனவே...” - செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்!
-
வேகமாக நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : எங்கு, எப்போது கரையை கடக்கிறது தெரியுமா?
-
“இதுதான் என்னுடைய 2026 தேர்தலுக்கான வாக்குறுதி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன அதிகாரபூர்வ தகவல்!
-
தமிழ்நாடு அரசின் ‘உங்க கனவ சொல்லுங்க..’ : உங்கள் எதிர்கால கனவுகளை தெரிவிப்பது எப்படி? - விவரம் உள்ளே!
-
திருப்பரங்குன்றம் விவகாரம் : ‘‘பியூஷ் கோயலின் ‘பியூஸ்’ போன வாதங்கள்...” - முரசொலி தலையங்கம்!