Tamilnadu
வீச்சரிவாளை காட்டி பெட்ரோல் பங்கில் ரூ.1.70 லட்சத்தை கொள்ளையடித்த கும்பல் : ராமநாதபுரத்தில் பரபரப்பு!
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வண்ணாந்தரவை மின்வாரிய நிலையம் அலுவலகம் அருகில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பங்கிற்கு இரவு நேரத்தில் முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்தனர்.
இவர்கள் திடீரென பங்கிலிருந்த ஊழியர்களை ஆயுதங்களால் தாக்கிவிட்டு, அவர்களிடமிருந்த ரூபாய் 1,70 லட்சத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பெட்ரோல் பங்கில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொள்ளை அடித்துச் சென்றவர்கள் மோர்குளம் என்ற கிராமத்தில் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அங்கு சென்ற போலிஸார் வாகனத்தைப் பறிமுதல் செய்தது ஆய்வு செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலிஸார் யார் இந்த முகமூடி கொள்ளையர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!