Tamilnadu
வீச்சரிவாளை காட்டி பெட்ரோல் பங்கில் ரூ.1.70 லட்சத்தை கொள்ளையடித்த கும்பல் : ராமநாதபுரத்தில் பரபரப்பு!
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வண்ணாந்தரவை மின்வாரிய நிலையம் அலுவலகம் அருகில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பங்கிற்கு இரவு நேரத்தில் முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்தனர்.
இவர்கள் திடீரென பங்கிலிருந்த ஊழியர்களை ஆயுதங்களால் தாக்கிவிட்டு, அவர்களிடமிருந்த ரூபாய் 1,70 லட்சத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பெட்ரோல் பங்கில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொள்ளை அடித்துச் சென்றவர்கள் மோர்குளம் என்ற கிராமத்தில் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அங்கு சென்ற போலிஸார் வாகனத்தைப் பறிமுதல் செய்தது ஆய்வு செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலிஸார் யார் இந்த முகமூடி கொள்ளையர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!