Tamilnadu
வீச்சரிவாளை காட்டி பெட்ரோல் பங்கில் ரூ.1.70 லட்சத்தை கொள்ளையடித்த கும்பல் : ராமநாதபுரத்தில் பரபரப்பு!
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வண்ணாந்தரவை மின்வாரிய நிலையம் அலுவலகம் அருகில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பங்கிற்கு இரவு நேரத்தில் முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்தனர்.
இவர்கள் திடீரென பங்கிலிருந்த ஊழியர்களை ஆயுதங்களால் தாக்கிவிட்டு, அவர்களிடமிருந்த ரூபாய் 1,70 லட்சத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பெட்ரோல் பங்கில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொள்ளை அடித்துச் சென்றவர்கள் மோர்குளம் என்ற கிராமத்தில் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அங்கு சென்ற போலிஸார் வாகனத்தைப் பறிமுதல் செய்தது ஆய்வு செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலிஸார் யார் இந்த முகமூடி கொள்ளையர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?
-
VBGRAMG சட்டம் ஒழிக! : ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
-
“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!