Tamilnadu
பெற்றோர்களே எச்சரிக்கை.. சாக்லேட் என நினைத்து மாத்திரையை சாப்பிட்ட 2 வயது குழந்தை பரிதாப பலி !
செங்கல்பட்டு மாவட்டம், தோட்ட நாவல் பகுதியைச் சேர்ந்தவர்கள் அசோக் - நந்தினி தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் லித்வின் என்ற குழந்தைக்குக் கடந்த 3ம் தேதி திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பெற்றோர் குழந்தையை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தையைச் சேர்ந்தனர்.
அப்போதும், குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மருத்துவர்கள் ஏன் குழந்தைக்கு இப்படி ஆனது என பரிசோதனை செய்தனர். அப்போதுதான் குழந்தை சாக்லேட் என நினைத்து பாராசிட்டமால் மாத்திரை சாப்பிட்டது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பிரச்சார Mode-ல் இருக்கும் விஜய்; தமிழ்நாட்டின் பாதுகாப்புச் சக்தி திமுக” : எழிலன் நாகநாதன் பேட்டி!
-
இளம்பெண் மீது கார் ஏற்றிப் படுகொலை : சென்னையை உலுக்கிய கொடூரம்!
-
”தொடர்ந்து 2வது ஐபிஎல் கோப்பை… சாதனை படைத்த RCB.. தோனி, ரோகித் பட்டியலில் ரஜத் படிதார்” - முழு விவரம்!
-
“ரிசர்வ் வங்கி விதிமுறைகளை காரணம் காட்டி விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் த.வெ.க அரசு”: தங்கம் தென்னரசு!
-
”விஜயின் ஆட்சி '20 நாள் இருண்ட காலம்'.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு” : முரசொலி கடும் விமர்சனம்!