Tamilnadu
பணத்துக்காக மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொலை.. வாலிபரின் கொடூரச் செயல்!
நாமக்கல் மாவட்டம், மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாராயி. மூதாட்டியான இவர் கணவரை இழந்த நிலையில், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், மூதாட்டியின் வீட்டின் கதவு அதிக நேரம் ஆகியும் திறக்கப்படாததால், பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர்.
ஆனால், மூதாட்டி கதவைத் திறக்காததால், கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் சடலமாக இருந்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த கொலை குறித்து மூதாட்டியின் வீட்டில் வசித்து வந்த காளிதாஸ் என்பரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது நான்தான் அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர் வைத்திருந்த பணத்தைத் திருட முயற்சி செய்தேன்.
அப்போது அவர் திடீரென எழுந்துவிட்டார். இதனால் அவரை அருகிலிருந்த சிறிய கல்லை கொண்டு தலையில் அடித்து கொலை செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து தப்பித்துச் சென்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார். பின்னர் போலிஸார் அவரை நீதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!
-
33.43 ஏக்கர் பரப்பளவில்.. ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்ட நாவலூர் ஏரி... இப்போ எப்படி இருக்கு தெரியுமா?
-
மக்களவையில் பேசவிடாமல் தொடர்ந்து தடுக்கப்பட்ட ராகுல் காந்தி… சர்வாதிகாரம் செய்யும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம் ஆனால்… பாகிஸ்தானின் முடிவுதான் என்ன!
-
உங்களின் Favourite Destination தமிழ்நாடு : உலக மக்களுக்கு முதலமைச்சர் சொன்ன வேண்டுகோள்!