Tamilnadu
காதலுக்கு இடைஞ்சல்: சொந்த மகனை பிரம்பால் அடித்து கொலை.. தாயின் வெறிச்செயல் - கிருஷ்ணகிரியில் கொடூரம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், கொட்டிலேட்டி கிராமத்தில் மல்லேஸ்வரன் மலைப்பகுதியில் சிறுவன் ஒருவனின் சடலம் இருப்பதாக போலிஸாருக்கு கடந்த பிப்ரவரி 8ம் தேதி தகவல் கிடைத்தது. அங்குச் சென்ற போலிஸார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் சிறுவன் யார் என்ற அடையாளம் தெரியாததால், கர்நாடகா, ஆந்திரா போலிஸாருக்கு சிறுவன் குறித்த தகவலை கிருஷ்ணகிரி போலிஸார் அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, தனது பேரன் ராகுல் காணவில்லை என பெங்களூருவைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் போலிஸில் புகார் அளித்திருந்தார். பிறகு கிருஷ்ணகிரியில் கொலை செய்யப்பட்ட இருந்த சிறுவன் தான் காணாமல்போன ராகுல் என்பதை போலிஸார் உறுதிப்படுத்தினர்.
பின்னர், சிறுவன் ராகுலை அவரின் தாய் நதியா, கள்ளக்காதலன் சுனில்குமார், மற்றொரு காதலி சிந்து ஆகியோர் மூன்று பேர் சேர்ந்து கொலை செய்தது போலியார் விசாரணையில் தெரியவந்தது. பிறகு மூன்று பேரையும் போலிஸார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் தகவல் வெளிவந்துள்ளது. இதில் நதியா மற்றும் சுனில்குமார் ஆகியோர் இருவருக்கும் ராகுல் இடையூறாக இருந்துள்ளார். இதனால் சிறுவனை நதியா பிரம்பால் அடித்தும், சூடு வைத்தும் சித்தரவதை செய்துவந்துள்ளார்.
பின்னர் கடந்த பிப்ரவரி 7ம் தேதி வீட்டில் தனியாக இருந்த ராகுலை சுனில்குமார் அடித்து கொலை செய்துள்ளார். பிறகு மற்றொரு காதலி சிந்துவுடன் சிறுவனின் உடலை காரில் எடுத்து வந்து கிருஷ்ணகிரி எல்லைப்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஏ.டி.எம் கார்டு மூலம் மாத்திரைப் பொடி.. கில்லி சரத்-ஐ என்ன செய்யப்போகிறார் யோக்கியர் விஜய்” - முரசொலி!
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!