Tamilnadu
“மொபைல் போனால் வழிமாறிய கணவன்.. வருத்தத்தில் மனைவி, மகள் எடுத்த விபரீத முடிவு” : சென்னையில் நடந்த சோகம் !
சென்னை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் ராஜபாண்டி. இவரது மனைவி ராஜலட்சுமி. இந்த தம்பதிக்கு ஒரு மக்கள் இருந்தார். அசோக் சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அசோக்கிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ராஜலட்சுமி கணவனைக் கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மன வருத்தத்திலிருந்த ராஜலட்சுமியும் அவரது மகளும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் அசோக் ராஜபாண்டியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய் மற்றும் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“IND vs AFG Tour.. டெஸ்ட், ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.. புது வீரர்களுடன் அசத்தல் Squad”
-
பொய்யை மட்டுமே பரப்பும் த.வெ.க! : ஆதாரங்களோடு அம்பலப்படுத்திய The Hindu ஊடகம்!
-
“பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் - இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” : தி.மு.க வலியுறுத்தல்!
-
வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல் : திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்!
-
கானா பாடகர் வெட்டி கொலை : 7 பேர் கைது - தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்!