Tamilnadu
“மேகம் கருக்கயிலே...” : அடுத்த மூன்று நாட்களுக்கு இதே நிலைதான் - எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் இன்று முதல் 5ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் சேலான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் தென்மேற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல், லட்சத்தீவு, கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் இன்று முதல் 7ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!