Tamilnadu
“மேகம் கருக்கயிலே...” : அடுத்த மூன்று நாட்களுக்கு இதே நிலைதான் - எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் இன்று முதல் 5ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் சேலான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் தென்மேற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல், லட்சத்தீவு, கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் இன்று முதல் 7ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் 'வாஷிங் மெஷின்' : பாஜக ஃபார்முல மகாராஷ்டிரா மாநிலத்தில் கிழிந்து தொங்குகிறது
-
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் முதல் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வரை.. DMK MP-க்கள் அடுக்கடுக்கான கேள்வி
-
தொழில் முனைவுதிட்டம் முதல் மானியத்துடன் கூடிய கடன் வரை.. SC/ST முன்னேற்றத்தின் பட்டியல்.. அரசு பாராட்டு!
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!