Tamilnadu
உத்தரகாண்டில் ஒரு செல்லூர் ராஜூ : "மழையை கட்டுப்படுத்த APP இருக்கு" - பா.ஜ.க அமைச்சரின் ‘குபீர்’ பேச்சு!
தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியின்போது அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ, நீர் ஆவியாதலைத் தடுக்கிறேன் எனக் கூறி தெர்மாகோலை வைத்து காமெடி செய்தார். இந்த நிகழ்வை அடுத்து இவரைத் ‘தெர்மாகோல் விஞ்ஞானி’ என்ற பலரும் கிண்டலாக அழைத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் தெர்மாகோல் விஞ்ஞானியையே மிஞ்சிவிட்டார் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் தன்சிங் ராவத். மழையை கட்டுப்படுத்த செயலி கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக கூறி காமெடி செய்துள்ளார் இவர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய பா.ஜ.க அமைச்சர் தன்சிங் ராவத், “இப்போது ஒரு செயலி வந்துள்ளது. இதன் மூலம் கனமழையால் உயிர் மற்றும் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இடத்தில் மழையின் தீவிரத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.
நான் விரைவில் இதுகுறித்து விளக்கக்காட்சி அளிக்கிறேன்.இந்த செயலி நாட்டின் பல மாநிலங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்” என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பா.ஜ.க அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
முன்கூட்டியே மழையின் அளவை அறிய ஏற்கெனவே கருவிகள் இருக்கின்றன. ஆனால், குழாயில் வரும் தண்ணீரை திறந்து விடுவதையும் பின்னர் மூடுவதையும் போல “ஒரு இடத்தில் பெய்யும் மழையைக் குறைக்கவும், கூட்டவும் செயலி கண்டுபிடித்துள்ளோம்” என்று கூறியிருப்பதைத்தான் ஏற்க முடியவில்லை என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்