Tamilnadu
"அண்ணா சாலையில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு சிலை" : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று தஞ்சாவூர் தி.மு.க எம்.எல்.ஏ நீலமேகம் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், “கடந்த காலத்தில் சென்னை அண்ணாசாலையில் முறையான அனுமதி பெற்று முத்தமிழறிஞர் கலைஞருக்கு சிலை வைக்கப்பட்டது. ஆனால் எக்காரணத்திற்காக சிலை அகற்றப்பட்டது என்று நான் சொல்லத் தேவையில்லை.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சென்னை அண்ணா சாலையில் முன்பு இருந்த அதே இடத்தில் கலைஞர் அவர்களுக்கு மீண்டும் சிலை அமைக்கப்பட வேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தினார்.
சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையை அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரியிருந்தனர். சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து, அண்ணா சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சிலை அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே சென்னை அண்ணா சாலையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்டோருக்கு சிலை அமைந்திருக்கும் நிலையில் கலைஞர் சிலை விரைவில் அமைக்கப்படவுள்ளது.
Also Read
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!