Tamilnadu
சத்தமில்லாமல் உதவி செய்த பிரபல நடிகர்... நெகிழ்ந்துபோன மாற்றுத்திறனாளி தம்பதியர்!
கணவன், மனைவி இருவருமே மாற்றுத்திறனாளிகள். இவர்கள் இருவருமே வேலைக்குச் சென்று தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் வீட்டில் வேலை செய்து வரும் மாற்றுத்திறனாளி பெண்ணின் மூன்று சக்கர வாகனம் அண்மையில் திருடுபோய் விட்டது.
இதனால் அவர் வேலைக்குச் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மூன்று சக்கர வாகனம் வாங்கிக் கொடுக்க அவரது நண்பர்கள் முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து மூன்று சக்கர வண்டி வாங்கக் குறைந்தபட்சம் ரூபாய் 65 ஆயிரம் வரை தேவைப்படும் என்பதால் பல இடங்களில் முயற்சி செய்துள்ளனர்.
இந்த தகவல் நண்பர் ஒருவரின் மூலம் நடிகர் கார்த்திக்கு கிடைத்துள்ளது. உடனே அந்த நண்பரிடம் ரூபாய் 35 ஆயிரம் தருவதாகக் கூறி, உடனே அந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் வங்கிக் கணக்கிற்கும் பணத்தை அனுப்பியுள்ளார்.
மேலும் மற்ற சிலரும் சிறு சிறு பண உதவிகளைச் செய்துள்ளனர். பின்னர் ரூபாய் 65 ஆயிரம் கிடைத்த உடன் மாற்றுத்திறனாளி பெண் மூன்று சக்கர வாகனத்தை வாங்கி மீண்டும் அந்த வாகனத்தில் மகிழ்ச்சியுடன் வேலைக்கு சென்று வருகிறார். வாகனம் வாங்க நிதி உதவி செய்த நடிகர் கார்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் மாற்றுத்திறனாளி தம்பதியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
சத்தமே இல்லாமல் நடிகர் கார்த்தி செய்த இந்த உதவியை அவரது ரசிகர்கள் உட்பட அனைவரும் இணையத்தில் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!