Tamilnadu
குடிபோதையில் தகராறு.. தட்டிக்கேட்ட பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த கொடூரம் - சேலத்தில் நடந்த பயங்கரம்!
சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரியதூரை பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபால் - விஜயா தம்பதி. இவரது வீட்டிற்கு அருகே கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான கோவிந்தராஜ் நேற்று முன் தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டின் அருகே நின்று கூட்டலிட்டுள்ளார்.
அப்போது விஜயா இதனைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் விஜயாவை அவதூறாக பேசியுள்ளார். இதனால் இருவீட்டாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது தகராறின்போது கோவிந்தராஜ், கோகுல்ராஜை கல்லால் தாக்க முயன்றபோது அதை தடுக்க முயன்ற விஜயாவின் தலையில் கல் பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதனையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!