Tamilnadu

பெற்றக் குழந்தையை துன்புறுத்தியது ஏன்? வாக்குமூலம் அளித்த துளசி.. அதிர்ச்சியில் உறைந்த போலிஸ்!

ஈன்றெடுத்த தாயே தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து ஆந்திராவில் இருந்த சம்மந்தப்பட்ட துளசி என்ற பெண்ணை செஞ்சி போலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.

கைதான துளசியை செஞ்சிக்கு அழைத்து வந்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளது. அதில், தனக்கு சென்னையைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருடான திருமணத்தை மீறிய உறவு இருப்பதும், கணவர் வடிவழகன் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவே குழந்தையை துன்புறுத்தியதாகவும் துளசி தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, கள்ளக்காதலனான பிரேம்குமாரை பிடிக்க 6 பேர் கொண்ட தனிப்படை சென்னை விரைந்திருக்கிறது. முன்னதாக துளசிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது தாய் வீட்டினர் கூறியதை அடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனநல மருத்துவர் அப்பெண்ணை சோதித்து பார்த்ததில் அவருக்கு மனநல பாதிப்பு ஏதும் இல்லை எனக் கூறியிருக்கிறார்.

பரிசோதனை முடிவு வந்ததை அடுத்து செஞ்சி முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு துளசி சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிப்பில் இருக்கிறான்” : கொடூரமாக தாக்கப்பட்ட குழந்தையின் தந்தை பேட்டி!