Tamilnadu
“சென்னையில் கலைஞருக்கு ரூ. 39 கோடி செலவில் நினைவிடம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
முத்தமிழறிஞர் கலைஞரின் அரும்பணிகளைப் போற்றும் விதமாக கலைஞரின் வாழ்வின் சாதனைகள், சிந்தனைகளை, இளைய தலைமுறையினரும் அறியும் வகையில் நவீன விளக்கப்படங்களுடன் காமராஜர் சாலை அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று விதி எண் 10-ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கலைஞர். 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். தோல்வி அவரை தொட்டதே இல்லை; வெற்றி அவரை விட்டதே இல்லை.
ஐந்து முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர் கலைஞர், இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது.
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கலைஞர்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!