Tamilnadu
தாயை தாக்கிய மகன்.. “நன்றி உள்ள விலங்கு” என்ற பழமொழிக்கு உதாரணமாய் உரிமையாளரைக் காப்பாற்றிய நாய் !
நாமக்கல் மாவட்டம், பொன்னேரிப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லம்மாள். மூதாட்டியான இவர் கொஞ்சம் கொஞ்சமாக ரூபாய் 7 லட்சம் வரை பணம் சேர்த்துவைத்துள்ளார். இவரது கணவர் இறந்ததை அடுத்து அவருக்குச் சொந்தமான நிலத்தையும் மகன் சண்முகத்திற்கு எழுதி வைத்துள்ளார்.
இந்நிலையில், மூதாட்டி நல்லம்மாள் சேமித்து வைத்துள்ள பணத்தைக் கேட்டு மகன் சண்முகத் தொடர்ந்து தனது தாயைக் கொடுமைப் படுத்தி வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று மீண்டும் தாயிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு மூதாட்டி தரமறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் வயதான தாய் என்றும் கூட பார்க்காமல் நடுரோட்டில் அவரை அடித்து கொடுமைப்படுத்தினார். அப்போது, மூதாட்டி நல்லம்மாள் வீட்டில் வளர்த்துவந்த நாய் அவரை காப்பாற்ற முயன்றது. இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, மூதாட்டியான தாயைத் தாக்கிய சண்முகத்தைக் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த சண்முகத்தின் மனைவியை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
மீண்டும் மீண்டும் மக்களை அவதிக்குள்ளாக்கும் த.வெ.க : வரவேற்பு கொண்டாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்!
-
“இன்று மகளிரின் நம்பிக்கையாக திகழும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” : முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
ரூ.1000 வரவு வைத்தது தவெக அரசு : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே நிலைத்து நிற்கும்!
-
“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல”: மீண்டும் பிற்போக்குவாதிகளை கதறவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
-
அ.தி.மு.க ஆதரவு : “ஊழல் சக்திகள் தயவில் விஜய் ஆட்சி!...” -வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!