Tamilnadu
அனைத்து மாவட்டங்களிலும் இனி 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்... அசத்தல் திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர்!
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழ்நாட்டில் முதன்முறையாக 24 மணி நேரம் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
மேலும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் அறக்கட்டளை சார்பில் 2 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் தமிழக சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் 100சதவீதம் தடுப்பூசிசெலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் சென்னையில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.
மேலும் நாளை மறுநாள் முதல் சென்னையில் இருக்கும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
அதைத்தொடர்ந்து, 37 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மாவட்ட மருத்துவமனைகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.
Also Read
- 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
 - 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!
 - 
	    
	      
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு