Tamilnadu
பெண் பெயரில் Fake ID: வாட்ஸ் அப்பில் ஆபாச பேச்சில் ஈடுபட்ட வாலிபர் - போலிஸில் சிக்கியது எப்படி?
இராமநாதபுரம் அருகே கடற்கரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணின் பெயரைப் பயன்படுத்தி அவரின் தோழிகளின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாச தகவல்கள் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெண் ஒருவர் தனது பள்ளித் தோழிகளிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.
இதையடுத்து வாட்ஸ் ஆப்பில் பேசுவது தனது தோழியில்லை என தெரியவந்தது. பின்னர் அந்தப் பெண் தன்னிடம் பேசிய நபரின் எண்ணைக் கொண்டு சமூகவலைத்தளங்களில் தேடியுள்ளார்.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்த பீம்ராவ் என்ற வாலிபர்தான் ஆபாசமாக பேசியது என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
பின்னர், போலிஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, இளம்பெண்ணின் பெயரில், பெண்களுக்கு ஆபாசத் தகவல் அனுப்பியது பீம்ராவ்தான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சைபர் கிரைம் போலிஸார் செங்கம் விரைந்து பீம்ராவை கைது செய்து ராமநாதபுரம் அழைத்து வந்தனர்.
பிறகு, பீம்ராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் அவரின் செல்போனில் இருந்த தகவல்களையும் போலிஸார் அழித்துள்ளனர். இளம் பெண்ணின் பெயரில் தோழிகளுக்கு ஆபாசமாகத் தகவல் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் : ரூ.1000 கோடி நிதி - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்!
-
”நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பீகார் தேர்தலில் தேஜஸ்வி புகழாரம்!
-
ராணிப்பேட்டை - 72,880 நபர்களுக்கு ரூ.296 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
35 மீனவர்கள் கைது : ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!