Tamilnadu
’விடியல் வந்துவிட்டது’ : அ.தி.மு.க ஆட்சியில் மறுக்கப்பட்ட உரிமை- தி.மு.க ஆட்சியில் நிறைவேறிய அற்புதம்!
ஆரணி அருகே கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்றவிடாமல் பெண் ஊராட்சி மன்ற தலைவரை தடுத்துவந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பெண் ஊராட்சி மன்ற தலைவர் தேசியக்கொடி ஏற்றினார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் சொந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக ஷர்மிளா தரணி உள்ளார். இவரைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் சேவூர் ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் தடுத்துவந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி தேசியக்கொடி ஏற்றினார்.
இது குறித்து ஷர்மிளா தரணி கூறுகையில்," அ.தி.மு.க ஆட்சியில் கடந்த இரண்டு வருடங்களாகத் தேசியக்கொடி ஏற்றவிடாமல் தடுத்தனர். இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்தவுடன், விடிவுகாலம் வந்துவிட்டது. தி.மு.க ஆட்சி வந்ததால் இந்த ஆண்டு மகிழ்ச்சியாக நான் தேசியக்கொடி ஏற்றினேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் முதல் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வரை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
மற்றொரு நிர்பயா : பா.ஜ.க ஆளும் அரியானாவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - உடலில் 12 தையல்!
-
“விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!