Tamilnadu
’விடியல் வந்துவிட்டது’ : அ.தி.மு.க ஆட்சியில் மறுக்கப்பட்ட உரிமை- தி.மு.க ஆட்சியில் நிறைவேறிய அற்புதம்!
ஆரணி அருகே கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்றவிடாமல் பெண் ஊராட்சி மன்ற தலைவரை தடுத்துவந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பெண் ஊராட்சி மன்ற தலைவர் தேசியக்கொடி ஏற்றினார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் சொந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக ஷர்மிளா தரணி உள்ளார். இவரைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் சேவூர் ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் தடுத்துவந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி தேசியக்கொடி ஏற்றினார்.
இது குறித்து ஷர்மிளா தரணி கூறுகையில்," அ.தி.மு.க ஆட்சியில் கடந்த இரண்டு வருடங்களாகத் தேசியக்கொடி ஏற்றவிடாமல் தடுத்தனர். இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்தவுடன், விடிவுகாலம் வந்துவிட்டது. தி.மு.க ஆட்சி வந்ததால் இந்த ஆண்டு மகிழ்ச்சியாக நான் தேசியக்கொடி ஏற்றினேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!