Tamilnadu
S.P.வேலுமணி நீட்சியாக சிக்கிய அதிமுக பிரமுகர்; முன்னாள் அமைச்சர் வளர்மதியின் உதவியாளர் வீட்டில் DVAC Raid
சென்னை எம்ஜிஆர் நகர் வள்ளல் பாரி தெருவில் உள்ள அதிமுக பிரமுகர் காண்ட்ராக்டர் வெற்றிவேல் என்பவரது இல்லத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது சென்னை மாநகராட்சியின் கீழ் விடப்பட்ட டென்டர்களில் முறைகேடு தொடர்பாக நடைபெறுவதாகவும் குறிப்பாக வெற்றிவேல் மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக இருந்தார் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் உதவியாளராக தற்போது வரை ஒப்பந்ததாரர் வெற்றிவேல் பணியாற்றி வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்ட போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிமுக பிரமுகர் ஒப்பந்ததாரர் வெற்றிவேல் இல்லத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் முதல் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வரை.. DMK MP-க்கள் அடுக்கடுக்கான கேள்வி
-
தொழில் முனைவுதிட்டம் முதல் மானியத்துடன் கூடிய கடன் வரை.. SC/ST முன்னேற்றத்தின் பட்டியல்.. அரசு பாராட்டு!
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!