Tamilnadu
S.P.வேலுமணி நீட்சியாக சிக்கிய அதிமுக பிரமுகர்; முன்னாள் அமைச்சர் வளர்மதியின் உதவியாளர் வீட்டில் DVAC Raid
சென்னை எம்ஜிஆர் நகர் வள்ளல் பாரி தெருவில் உள்ள அதிமுக பிரமுகர் காண்ட்ராக்டர் வெற்றிவேல் என்பவரது இல்லத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது சென்னை மாநகராட்சியின் கீழ் விடப்பட்ட டென்டர்களில் முறைகேடு தொடர்பாக நடைபெறுவதாகவும் குறிப்பாக வெற்றிவேல் மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக இருந்தார் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் உதவியாளராக தற்போது வரை ஒப்பந்ததாரர் வெற்றிவேல் பணியாற்றி வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்ட போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிமுக பிரமுகர் ஒப்பந்ததாரர் வெற்றிவேல் இல்லத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !