Tamilnadu
"தற்போதைய நிதிநெருக்கடிக்கு அ.தி.மு.கவின் மிகமோசமான ஆட்சியே காரணம்" : கே.பாலகிருஷ்ணன் சாடல்!
பத்து ஆண்டுகாலம் ஆட்சியில் வெற்று அரசாக இருந்த அ.தி.மு.க என்ன செய்தது என்பதை நினைத்துப்பார்த்து தி.மு.க அரசை விமர்சிக்க வேண்டும் என சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், "தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கு என தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் தி.மு.க அரசு விவசாயிகள் மீது தனிக்கவனம் செலுத்தியுள்ளதை எடுத்துக்காட்டியுள்ளது.
தி.மு.க அரசின் 100 நாள் சாதனையில் கொரோனாவை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க அரசின் முதல் பட்ஜெட்டினை யானைப்பசிக்கு சோளப்பொறி என்று அ.தி.மு.க விமர்சனம் செய்துள்ளது.
பத்து ஆண்டுகள் வெற்று அரசை நடத்திய அ.தி.மு.க, தங்களின் ஆட்சியில் என்ன செய்தார்கள் என்பதைப் பரிசீலித்து தி.மு.கவை விமர்சிக்க வேண்டும். அ.தி.மு.க அரசின் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சுமையை தற்போது தி.மு.க அரசு அனுபவித்து வருகிறது.
கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் தலையில் சுமையை ஏற்றும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது. பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைக்கும் என்ற நம்பிக்கை இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் ரூ.4,000 கோடி முதலீடு செய்யும் ஜியோ ஹாட்ஸ்டார் : 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!
-
பிரதமர் மோடி பாட வேண்டியது ‘வந்தே ஏமாத்துறோம்' : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!