Tamilnadu
"தற்போதைய நிதிநெருக்கடிக்கு அ.தி.மு.கவின் மிகமோசமான ஆட்சியே காரணம்" : கே.பாலகிருஷ்ணன் சாடல்!
பத்து ஆண்டுகாலம் ஆட்சியில் வெற்று அரசாக இருந்த அ.தி.மு.க என்ன செய்தது என்பதை நினைத்துப்பார்த்து தி.மு.க அரசை விமர்சிக்க வேண்டும் என சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், "தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கு என தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் தி.மு.க அரசு விவசாயிகள் மீது தனிக்கவனம் செலுத்தியுள்ளதை எடுத்துக்காட்டியுள்ளது.
தி.மு.க அரசின் 100 நாள் சாதனையில் கொரோனாவை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க அரசின் முதல் பட்ஜெட்டினை யானைப்பசிக்கு சோளப்பொறி என்று அ.தி.மு.க விமர்சனம் செய்துள்ளது.
பத்து ஆண்டுகள் வெற்று அரசை நடத்திய அ.தி.மு.க, தங்களின் ஆட்சியில் என்ன செய்தார்கள் என்பதைப் பரிசீலித்து தி.மு.கவை விமர்சிக்க வேண்டும். அ.தி.மு.க அரசின் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சுமையை தற்போது தி.மு.க அரசு அனுபவித்து வருகிறது.
கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் தலையில் சுமையை ஏற்றும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது. பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைக்கும் என்ற நம்பிக்கை இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இதுபோன்ற பிரதமர் நமக்கு வேண்டாம்... சிந்தித்து வாக்களியுங்கள் - பட்டியலிட்டு மோடியை விமர்சித்த துருவ் ரதீ
-
சட்டையை மாற்றி பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... “தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?” - குவியும் கண்டனம்!
-
“பாஜகவிடம் இருந்து அனைத்தையும் காப்பாற்றுவதற்கான தேர்தல் இது” - தேஜஸ்வி தாக்கு !
-
பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... பாஜக ஆளும் உ.பி-யில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி... வீடியோ வைரல் !
-
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு.. பாஜக ஆதரவாளரை கைது செய்த கர்நாடக போலிஸ்... கொந்தளிக்கும் பாஜக தலைவர்கள்!