Tamilnadu
தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு
தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மக்களுக்கு அப்போது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார்.
இதையடுத்து தேர்தல் வெற்றி பெற்று முதலமைச்சாரக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றிதில் இருந்தே தொடர்ச்சியாக வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.
இதனடிப்படையில்,இன்றைய சட்டப்பேரவையில் "உழவர் நலனின்றி உழவுத்தொழில் இல்லை' என்ற திருவள்ளுவரின் வேளாண்மை குறித்த விளக்கத்தை மேற்கொள் கோட்டி 273 பக்கங்கள் கொண்ட வேளாண்மை நிதிநிலையை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறோம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக நேற்றைய சட்டட்பபேரவையில் 2021 -2021ம் ஆண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!