Tamilnadu
திருட்டு மொபைலை விற்று பங்கு பிரித்த ஜெயில் வார்டன்; சென்னையில் சிக்கிய மூவர்!
சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் தொடர் மொபைல் திருடனான சிபி என்பவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் காவல்துறையைச் சேர்ந்தவரே திருடனுக்கு உடைந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
விசாரணையில் சிறையில் இருந்தபோது ஜெயில் வார்டனாக பணிபுரிந்து வரும் சிறை காவலர் ரமேஷ் என்பவர் மொபைல் போன்களை திருடி தன்னிடம் விற்குமாறு கூறியதாகவும் அதன்பேரில் சிபி மொபைல் போனை திருடி சிறை காவலரான ரமேஷிடம் கொடுத்து வந்துள்ளார்.
அவ்வாறு திருடப்பட்ட செல்போன்களை சிறைக் காவலர் ரமேஷ் பர்மா பஜாரில் திருட்டு மொபைலை வாங்கும் கார்த்திக் என்பவரிடம் அதனை விற்று பாதி பணத்தை தான் எடுத்துக்கொண்டும் மீதி பணத்தை மொபைல் திருடனான சிபிக்கும் கொடுத்து வந்துள்ளார்.
இந்த தகவலை அடிப்படையாக கொண்டு மொபைல் திருடன் சிபி சிறைக்காவலர் ரமேஷ் மற்றும் பர்மா பஜாரைச் சேர்ந்த திருட்டு மொபைலை வாங்கும் கார்த்தி ஆகியோரை கைது செய்த அமைந்தகரை போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!