Tamilnadu
திருட்டு மொபைலை விற்று பங்கு பிரித்த ஜெயில் வார்டன்; சென்னையில் சிக்கிய மூவர்!
சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் தொடர் மொபைல் திருடனான சிபி என்பவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் காவல்துறையைச் சேர்ந்தவரே திருடனுக்கு உடைந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
விசாரணையில் சிறையில் இருந்தபோது ஜெயில் வார்டனாக பணிபுரிந்து வரும் சிறை காவலர் ரமேஷ் என்பவர் மொபைல் போன்களை திருடி தன்னிடம் விற்குமாறு கூறியதாகவும் அதன்பேரில் சிபி மொபைல் போனை திருடி சிறை காவலரான ரமேஷிடம் கொடுத்து வந்துள்ளார்.
அவ்வாறு திருடப்பட்ட செல்போன்களை சிறைக் காவலர் ரமேஷ் பர்மா பஜாரில் திருட்டு மொபைலை வாங்கும் கார்த்திக் என்பவரிடம் அதனை விற்று பாதி பணத்தை தான் எடுத்துக்கொண்டும் மீதி பணத்தை மொபைல் திருடனான சிபிக்கும் கொடுத்து வந்துள்ளார்.
இந்த தகவலை அடிப்படையாக கொண்டு மொபைல் திருடன் சிபி சிறைக்காவலர் ரமேஷ் மற்றும் பர்மா பஜாரைச் சேர்ந்த திருட்டு மொபைலை வாங்கும் கார்த்தி ஆகியோரை கைது செய்த அமைந்தகரை போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“விசுவாசத்துக்கு அடையாளம் OPS.. நிதிஷ்குமாரின் கதிதான் பழனிசாமிக்கும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி தொழிலாளர் ஓய்வு இல்லங்களை திறந்து வைத்த அமைச்சர் சி.வி.கணேசன்!
-
தமிழ்நாட்டின் வரலாற்றில் மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்கள் இல்லாத சூழல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு... குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை... மகளிர் நீதிமன்றம் அதிரடி!
-
இவ்வளவு வசதிகளா... தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்த உயர் சிறப்பு மருத்துவமனை!